டெல்லியில் கொடூரம்..! ஐடி நிறுவன பெண் மாடியிலிருந்து தள்ளிப் படுகொலை..? “வேலைக்கு போகக் கூடாது” என கணவர் குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாக தம்பி பகீர் புகார்..!! – cinefeeds
Connect with us

CRIME

டெல்லியில் கொடூரம்..! ஐடி நிறுவன பெண் மாடியிலிருந்து தள்ளிப் படுகொலை..? “வேலைக்கு போகக் கூடாது” என கணவர் குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாக தம்பி பகீர் புகார்..!!

Published

on

தலைநகர் டெல்லியின் லோதி காலனி பகுதியில் உள்ள பாலிகா குஞ்ச் அடுக்குமாடி குடியிருப்பில், 28 வயதான என்ற புதுப்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தர்பூர் நிறுவனத்தில் ஆகப் பணிபுரிந்து வந்த இவருக்கு, கடந்த ஏப்ரல் 24, 2026 அன்று தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சனிக்கிழமை அன்று அவர் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துப் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் கணவர் குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆக்ருதி தொடர்ந்து வேலைக்குச் செல்வதை அவரது புகுந்த வீட்டினர் விரும்பவில்லை என்றும், வேலையை விடுமாறு வற்புறுத்தி அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகக் கூறியுள்ளனர். இது தற்கொலை அல்ல என்றும், அவரை மாடியிலிருந்து கீழே தள்ளிப் படுகொலை செய்துவிட்டு, தற்கொலை போல நாடகமாட முயல்கிறார்கள் என்றும் அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இப்புகாரின் அடிப்படையில் டெல்லி லோதி காலனி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திருமணம் நடந்து மூன்று மாதங்களே ஆவதால், இச்சம்பவம் குறித்து துணை கோட்டாட்சியர் (SDM) முன்னிலையில் விரிவான மெஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அனைத்துக் கோணங்களிலும் காவல் துறையினர் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in