LATEST NEWS
“‘நான் ஒன்னும் கலாய்க்கலப்பா!’.. திருமாவளவன் விவகாரத்தில் பல்டி அடித்த வைகோ.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!
விசிக கட்சி தவெக அமைச்சரவையில் (காங்கிரஸ், முஸ்லிம் லீக் உடன்) சேர்ந்தாலும், தாங்கள் இன்னும் திமுக-வின் நண்பர்கள்தான் என்றும், நினைத்தால் தவெக-வை விட்டு வெளியேறுவோம் என்றும் திருமாவளவன் இரட்டை நிலைப்பாட்டோடு பேசுகிறார். இதைக் கிண்டல் செய்யும் விதமாக வைகோ அவருக்கு “நோபல் பரிசு கொடுக்கலாம்” என விமரிசிக்க, திருமாவளவனோ “பரிந்துரைக்கு நன்றி” என வைகோவை நக்கல் செய்து பதிலடி கொடுத்துள்ளார்
இந்த விவகாரம் விசிக மற்றும் மதிமுக தொண்டர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், வைகோ தற்போது இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய விளக்கமளித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவனைப் புண்படுத்தும் நோக்கம் தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என்றும், தனது நக்கல் வார்த்தைகளால் அவர் மனம் புண்பட்டிருந்தால் அந்த வார்த்தைகளைத் தான் உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், திருமாவளவன் மீது தனக்குத் துளியளவும் கோபமோ அல்லது வருத்தமோ கிடையாது எனக் கூறி வைகோ சமரசம் செய்துகொண்டதன் மூலம், தவெக அமைச்சரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்கும் முன்னாள் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த வார்த்தைப் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது
