LATEST NEWS
உஷார்! டெலிகிராமில் ஆபாச வீடியோக்கள்! மயக்க மருந்து கொடுத்து அரங்கேறிய கொடூரம்… சிக்கிய 32 வயது மருத்துவருக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
ஜெர்மனியில் “நிபுணர்களுக்கான ஜெர்மானிய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி” என்ற ரகசியப் பெயரில் இயங்கி வந்த கொடூரமான பாலியல் அச்சுறுத்தல் கும்பல் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிகிராம் செயலியில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் இயங்கிய இக்குழுவில், முக்கியமாக சீனப் பெண்களைக் குறிவைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரங்கள் அரங்கேறியுள்ளன. தங்களின் காட்டுமிராண்டித்தனமான செயல்களை மறைக்க, பெண்களை “கார்கள்” என்றும், மயக்க மருந்துகளை “எரிபொருள்” என்றும், பாலியல் வன்புணர்வை “ஓட்டுதல்” என்றும் இவர்கள் குறியீட்டு வார்த்தைகளால் அழைத்துள்ளனர். சுயநினைவற்ற நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்ந்து தங்களின் வக்கிரத்தை இந்த கும்பல் கொண்டாடியுள்ளது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தீவிரப் புலனாய்வின் விளைவாக, ஏற்கனவே மூன்று பேர் தண்டிக்கப்பட்ட நிலையில், பெர்லினில் வசிக்கும் 32 வயதான மருத்துவர் ஜிட்டிங் எஸ். என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை வெறும் பொருளாகக் கருதி, இரக்கமற்ற முறையில் திட்டமிட்டு இக்குற்றங்கள் நடத்தப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக டெலிகிராம் தளம் பயன்படுத்தப்படுவதாக அதன் நிறுவனர் ஏற்கனவே பாரிஸில் கைது செய்யப்பட்ட பின்னணியில், இவ்வளவு பெரிய நெட்வொர்க் யாருக்கும் தெரியாமல் எப்படி இயங்கியது என்பது குறித்தும், சர்வதேச அளவிலான பெண் வெறுப்பு இணையக் குழுக்களுடன் இதற்குள்ள தொடர்பு குறித்தும் அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
