LATEST NEWS
“செம ட்விஸ்ட்…” ரீல்ஸ் பண்ணி வைரலாக ஆசைப்பட்டாங்க… ஆனா போலீஸ் இவங்கள எப்புடி வைரலாக்கிட்டாங்கன்னு பாருங்க..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஆபத்தான முறையில் நீரில் இறங்கி ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்களுக்குக் காவல்துறை விசித்திரமான முறையில் பாடம் புகட்டியுள்ளது. மௌதஹா பகுதியில் உள்ள கம்ஹரியா அணையில் தற்போது நீர்மட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. இருப்பினும், சமூக வலைத்தளங்களில் ‘லைக்ஸ்’ மற்றும் ‘வியூஸ்’ பெறுவதற்காக சில இளைஞர்கள் எந்தவித பாதுகாப்பும் இன்றி ஆழமான நீரில் இறங்கி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த காவல்துறையினரின் பார்வையில் இந்த இளைஞர்கள் பட்டனர். உடனடியாகச் செயல்பட்ட காவலர்கள், அவர்களை நீரிலிருந்து வெளியே வரவழைத்தனர். சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் ரீல்ஸிற்காகத் தங்களின் உயிரைப் பணயம் வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், வழக்கமான நீண்ட சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல், சம்பவ இடத்திலேயே அவர்களுக்குப் பாடம் புகட்ட முடிவு செய்தனர்.
https://www.youtube.com/shorts/7e3ZLIvBE3M?feature=share
அதன்படி, அவர்கள் அணிந்திருந்த அரைக் காற்சட்டையுடன் தவளை போலக் குதித்துச் செல்லும் ‘ஃபிராக் ஜம்ப்’ உடற்பயிற்சியைச் செய்ய வைத்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் மீண்டும் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பினர். மௌதஹா காவல் நிலைய ஆய்வாளர் சந்தோஷ் சிங் கூறுகையில், “இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது, மீண்டும் இதுபோன்ற அலட்சியத்தில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.
