என்னது பொன்னியின் செல்வன் படத்தில் இந்த பாடல் காப்பியா?.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு… அதிர்ச்சியில் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது பொன்னியின் செல்வன் படத்தில் இந்த பாடல் காப்பியா?.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு… அதிர்ச்சியில் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்கள்..!!

Published

on

இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதே சமயம் இரண்டு ஆஸ்கார் விருதை குறித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.

இப்படி சினிமாவில் பிஸியாக வளம் வந்து கொண்டிருக்கும் ஏ ஆர் ரகுமானுக்கு எதிராக இந்திய கிளாசிக்கல் பாடகர் பயாஸ் வாசி புதீன் தாகர் பதிப்புரிமை மீறல் வழக்கை தொடர்ந்ததை அடுத்து பொன்னியின் செல்வன் பகுதி 2 பிரபல பாடலான வீர ராஜா வீரா என்ற பாடலின் மூல பதிப்பை வெளியிடுமாறு ஏ ஆர் ரகுமானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகத்தில் வீரா ராஜ வீர… சூரா தீர சூர என்ற பாடல் வெளியாகி இருந்தது.

Advertisement

இந்தப் பாடல் தற்போது பதிப்புரிமை சிக்கலை சந்தித்துள்ள நிலையில் ஏ ஆர் ரகுமானுக்கு எதிராக இந்திய கிளாசிக்கல் பாடகர் பயாஸ் வாசி புதீன் தாகர் பதிப்புரிமை மீறல் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சர்ச்சைக்கு காரணமான பாடல்களை கேட்ட நீதிபதி தாளத்தில் நிச்சயமாக ஒருவித ஒற்றுமை உள்ளது என்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறினார். மேலும் இந்தப் பாடலின் மூலப்பதிப்பை வெளியிடுமாறு ஏ ஆர் ரகுமானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in