LATEST NEWS
அய்யோ நான் ரீல் தாய்மாமன் இல்லீங்க… ரியல் தாய்மாமன்… எதிர்க்கட்சிகளுக்கு CM விஜய் மாஸ் பதிலடி..!!!
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம், வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் விஜய், தாம் திரைப்படங்களில் நடிக்கும் வெறும் ‘ரீல்’ தாய்மாமன் அல்ல என்றும், மக்களின் உண்மையான நலனில் அக்கறை கொண்ட ‘ரியல்’ தாய்மாமன் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் பிறப்பைத் தங்க மோதிரத்துடன் கொண்டாடும் ஒரு தாய்மாமனாகத் தாம் திகழ்வதாக அவர் உணர்த்தியுள்ளார்.
கடந்த கால ஆட்சியைப் போலப் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் போலியாக நாடகம் ஆடாமல், பெண்களுக்கு எப்போதும் ஒரு வலுவான அரணாகத் தனது அரசு செயல்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்கள் முன்னுரிமை என்பதையும் அவர் தனது பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார்.
