LATEST NEWS
“நான் செத்தா”.. அமெரிக்க ராணுவத்திற்கு டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு.. பதறும் உலக நாடுகள்..!!
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்கனவே ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒருவேளை தான் படுகொலை செய்யப்பட்டால், அதற்குப் பழிவாங்கும் விதமாக ஈரான் நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான மற்றும் தீவிரமான தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.
தன்னைத் தவிடுபொடியாக்கும் நோக்கில் ஈரான் நாடு புதிய கொலைச் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இஸ்ரேல் உளவுத்துறை அமெரிக்காவிற்கு ரகசியத் தகவல் அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்வினையாற்றும் விதமாகவே டிரம்ப் இந்த அதிரடியான எச்சரிக்கையையும், ராணுவத்திற்கான உத்தரவையும் விடுத்துள்ளார்.
