LATEST NEWS
அந்தேரியை அலறவிட்ட பேருந்து…! டிரைவரின் கன்ட்ரோலை இழந்து… 14 வாகனங்களை சுக்குநூறாக்கிய பகீர் விபத்து..!!
மும்பையின் அந்தேரி பகுதியில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுநர் வண்டியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றும் முடியாததால், அந்த நொடியில் பேருந்து சாலையில் இருந்த மற்ற வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக மோதத் தொடங்கியது. இந்த எதிர்பாராத கட்டுப்பாடற்ற வேகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த மற்றும் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் என அடுத்தடுத்து மொத்தம் 14 வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி தள்ளியது. இந்த அடுத்தடுத்த மோதல்களால் பல வாகனங்கள் அப்பளம்போல் நசுங்கி பலத்த சேதமடைந்தன. விபத்தின் வீரியத்தால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்த பயங்கர விபத்தின் போது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் வாகனங்களில் இருந்த சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்து குறித்த விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
