LATEST NEWS
“அதிர்ச்சி!.. புயல் கொண்டுவந்த ‘விஷ’ வெள்ளம்.. கதவை தட்டும் 900 நாகப்பாம்புகள் நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!
சீனாவை உலுக்கிய ‘மைசாக்’ புயல் வெள்ளத்தினால் டெங்வெய் பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் பாம்பு வளர்ப்புப் பண்ணையிலிருந்து 900-க்கும் மேற்பட்ட பாம்புகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பரவியுள்ளதே இதற்குக் காரணம். தப்பியோடிய பாம்புகளில் நச்சுத்தன்மை வாய்ந்த கோப்ராக்களும் இருப்பதால், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
चीन के Dengwei गांव के एक स्नेक ब्रीडिंग फार्म हाउस में Maysak तूफान के कारण आए बाढ़ का पानी घुसने से 900 सांप बह गए और गांवों खेतों में फैल गए.
घटना के बाद पूरे डेंगवेई गांव में Emergency घोषित कर दिया गया है .ग्रामीण और विशेष बचाव दल जाल तथा बांस के डंडों की मदद से इन सांपों… pic.twitter.com/0JJg18Uwpj— Ankit Gupta (@AnkitGu75649580) July 11, 2026
இந்த அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து, டெங்வெய் கிராமம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிராம மக்களும், சிறப்பு மீட்புக்குழுவினரும் இணைந்து வலைகள் மற்றும் மூங்கில் கம்புகளின் உதவியோடு தப்பியோடிய பாம்புகளைத் தீவிரமாகத் தேடிப் பிடித்து வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
