LATEST NEWS
நெஞ்சு படபடக்கும் சிசிடிவி காட்சி…! ஒரு நொடி அலட்சியம்… நொறுங்கிய இரு உயிர்கள்..! உ.பி-யில் நடுக்கமடைய வைக்கும் விபத்து…!!!
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்திலுள்ள குர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஜூலை 6ஆம் தேதி அன்று மாலை வேளையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. காயாசி லால் என்பவர், தனது 70 வயது தந்தை பாபுலாலுடன் மோட்டார் சைக்கிளில் குர்சராய் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர், பின்னால் வாகனம் வருகிறதா என்று கவனிக்காமல் திடீரெனத் திறந்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காரின் கதவில் பலமாக மோதியதில், தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
சாலையில் விழுந்த அடுத்த சில நொடிகளில், எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு கார் அவர்கள் மீது ஏறியது. இந்த அடுத்தடுத்த தொடர் விபத்தால் தந்தையும் மகனும் படுகாயமடைந்தனர். இதில் 70 வயதான பாபுலாலுக்கு நெஞ்சுப்பகுதியில் எலும்பு முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மகன் காயாசி லாலுக்கும் நெஞ்சு மற்றும் தாடைப் பகுதிகளில் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. விபத்து நடந்த உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு முதலுதவிக்காக குர்சராய் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், குர்சராய் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்துக்குக் காரணமான இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் கோரப்பட்டுள்ளது. தற்பொழுது காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
