LATEST NEWS
“நீங்க வெளியே போங்க” அதிகாரிகளை வெளியே அனுப்பிவிட்டு… அமைச்சர்களை அலறவிட்ட முதல்வர் விஜய்.. நள்ளிரவில் நடந்த மாஸ் சம்பவம்..!!
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் ஊழலுக்கு எதிராக எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில், அரசு உயர் அதிகாரிகளைத் தற்காலிகமாக வெளியேறச் சொன்ன முதல்வர், தனது அமைச்சர்களுடன் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது குறிப்பிட்ட சில அமைச்சர்களின் பெயர்களை நேரடியாகச் சுட்டிக்காட்டி, அவர்களின் செயல்பாடுகள் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி 100 விழுக்காடு ஊழலற்ற ஆட்சியாக மக்கள் மத்தியில் திகழ வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் மிக உறுதியாகப் பேசியுள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த தண்டனை உறுதி என்றும், மக்கள் பணத்தைச் சூறையாடுவதை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் ஆவேசமான தொனியில் எச்சரித்துள்ளார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஊழல் புகார்களில் சிக்கினால் எவ்விதப் பரிசீலனையுமின்றி உடனடியாகப் பதவி பறிக்கப்படும் என்ற முதல்வரின் இந்த நேரடி எச்சரிக்கை அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட இந்த ஆட்சியில், தனிநபர்களின் தவறான செயல்பாடுகளால் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் கறாராகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தவெக அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
