“தப்பு உங்க மேலதான்..! அடுத்தவர் மளிகைப் பொருளை ஆட்டையை போட்ட அண்டை வீட்டார்..! ஸ்விக்கி டெலிவரியால் அம்பலமான பணக்காரர்களின் சுயரூபம்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தப்பு உங்க மேலதான்..! அடுத்தவர் மளிகைப் பொருளை ஆட்டையை போட்ட அண்டை வீட்டார்..! ஸ்விக்கி டெலிவரியால் அம்பலமான பணக்காரர்களின் சுயரூபம்..!!”

Published

on

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரித்திகா கன்னா என்பவர், தனது அண்டை வீட்டார் செய்த செயலால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஸ்விக்கியில் அவர் ஆர்டர் செய்த சுமார் 300 ரூபாய் மதிப்பிலான பால், தயிர், வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், தவறுதலாக அதே பிளாட் எண்ணைக் கொண்ட மற்றொரு டவரில் டெலிவரி செய்யப்பட்டன. அந்தப் பொருட்கள் தனக்குரியது அல்ல என்று தெரிந்தும், அண்டை வீட்டார் அதைத் திருப்பித் தராமல் தாங்களே எடுத்துக்கொண்டனர். டெலிவரி பார்ட்னர் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று பொருட்கலைக் கேட்டபோது, “இது உங்கள் தவறு, நாங்கள் இதைப் பயன்படுத்தப் போகிறோம்” என்று அந்த வீட்டின் பெண்மணி அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ரித்திகா, “இது வெறும் 300 ரூபாய் பற்றிய விஷயம் அல்ல, நேர்மை பற்றியது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டில் வசிக்கிறீர்கள், ஆனால் உங்களின் செயல் மிகவும் மோசமாக உள்ளது. டெலிவரி செய்பவர்களின் தவறுக்கு, அவர்களின் போனஸ் மற்றும் ரேட்டிங் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டாமா?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

வசதி என்பது வீட்டின் மதிப்பில் இல்லை, ஒருவரின் சிந்தனையில்தான் இருக்கிறது என்றும், இவர்கள் பணத்தால் பெரியவர்களாக இருந்தாலும் குணத்தால் ஏழைகள் என்றும் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். நேர்மை என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு பண்பு, இதற்கு அடுக்குமாடி குடியிருப்புக்கும் குடிசைக்கும் சம்பந்தமில்லை என்றும், தவறு எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம், அதைத் திருத்திக் கொள்ளும் மனிதநேயம் தான் முக்கியம் என்றும் பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். “மனிதநேயத்திற்கு விலை கிடையாது, பிறரின் கடின உழைப்பை மதிப்பதே உண்மையான பண்பு” என்று ரித்திகா முடித்திருப்பது, இன்றைய சமூகத்தின் மனநிலை குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in