LATEST NEWS
“டாய்லெட்டுக்கு அடியில் 1200 ஆண்டு ரகசியம்” – இரட்டை குழந்தைகளின் எலும்புக்கூட்டை பார்த்து மிரண்டு போன விஞ்ஞானிகள்… அரிய மரபணு மாற்றம் அம்பலம்..!!
துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க எபிசஸ் நகரில், உலகப் புகழ்பெற்ற ஆர்ட்டெமிஸ் கோயிலுக்கு அருகில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான ரோமானிய கழிப்பறைக்குக் கீழே ஒரு விசித்திரமான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Blunt. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த அகழ்வாராய்ச்சியின் போது பாறைகளால் பாதுகாப்பாகக் கட்டப்பட்ட கல்லறையைத் திறந்தபோது, அதனுள் இரண்டு சிறிய மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
ஆராய்ச்சியாளர்களின் விரிவான ஆய்வின்படி, இந்த எலும்புக்கூடுகள் சுமார் 7 முதல் 7.5 மாதங்களில் முன்கூட்டியே பிறந்த இரட்டைக் குழந்தைகளின் எச்சங்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இதில் ஒரு குழந்தையின் கழுத்துப் பகுதியில் ‘சூப்பர்நியூமரி செர்விகல் ரிப்’ எனப்படும் கூடுதல் விலா எலும்பு இருந்தது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே ஏற்படும் ஒரு அரிய மரபணு மாற்றமாகும்.
அக்காலகட்ட வழக்கப்படி இறந்தவர்கள் பொதுவான மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த குழந்தைகள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே இறந்திருக்கலாம் என்பதால் தனி இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், கழிப்பறைக்குக் கீழே இருந்தாலும், குடும்பத்தினர் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் கற்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் இந்த கல்லறையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
