LATEST NEWS
காலையிலே அதிர்ச்சி..! நண்பர்களுடன் ஜாலியாகச் சென்ற பிஞ்சுகள்… நொடிப் பொழுதில் பறிபோன 2 உயிர்கள்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
ஹைதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று காலையில் மிகக் கொடூரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சிறுவர்கள் சிலர் தங்கள் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காகச் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஒன்று பலமாக மோதியுள்ளது.
రోడ్డు ప్రమాదంలో ఇద్దరి మృతి
HYD: కూకట్పల్లి మెట్రో స్టేషన్ వద్ద ఆదివారం ఉదయం తీవ్ర విషాదం చోటుచేసుకుంది. ఆదివారం సెలవు రోజు కావడంతో స్నేహితులతో కలిసి బైక్పై క్రికెట్ ఆడేందుకు వెళ్తున్న మైనర్లను లారీ ఢీకొట్టింది. ఈ ఘోర ప్రమాదంలో మహేశ్ (17), లక్ష్మీ తేజ్ (17) అక్కడికక్కడే… pic.twitter.com/Q41KrdBpeo— BigTV APP (@BigtvApp) July 26, 2026
இந்த பயங்கர விபத்தில் மகேஷ் மற்றும் லட்சுமி தேஜ் ஆகிய இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இதில் படுகாயமடைந்த மற்றொரு சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த சிறுவன் நடந்த விபத்தை பற்றி விபரித்துள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான பின்னணி மற்றும் மேலதிக விவரங்களைச் சேகரிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
