LATEST NEWS
அடேங்கப்பா..! துணி துவைத்தால் ரூ.90 லட்சமா..?! லண்டனில் வெளியான வைரல் வேலை… ஆனா அந்த ஒரே ஒரு கண்டிஷன கேட்டா அலறிடுவீங்க..!!
லண்டனில் வெளியான ஒரு வேலைவாய்ப்பு விளம்பரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் பார்வையில் துணி துவைக்கும் வேலைக்கு ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் தருவது போலத் தெரிந்தாலும், பிரிட்டனின் ‘தி லேடி’ இதழ் மற்றும் ‘பியூசேம்ப் பார்ட்னர்ஸ்’ ஏஜென்சி வெளியிட்ட இந்த வேலைவாய்ப்பிற்குப் பின்னால் கடுமையான பல நிபந்தனைகளும் பொறுப்புகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலையில் சேருபவர் வெறும் சாதாரணத் துணிகளைத் துவைப்பவர் அல்ல; உலகளவில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் மென்மையான டிசைனர் ஆடைகளைப் பராமரிக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். எந்த ஆடையை எப்படித் துவைக்க வேண்டும், எவ்வாறு காயவைத்துச் சேமிக்க வேண்டும் என்பதில் சிறு தவறு நிகழ்ந்தாலும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடைகள் வீணாகிவிடும் என்பதால் இதில் மிகுந்த கவனம் தேவை. மேலும், முதலாளியின் ஆடம்பர கார்களைப் பராமரித்து ஓட்டுவது, முக்கியக் கூட்டங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது மற்றும் வீட்டில் நடைபெறும் உயர்மட்ட விருந்துகள் மற்றும் நிகழ்ச்சிகளைத் திறம்பட நிர்வகிப்பது போன்ற பொறுப்புகளும் இதில் அடங்கும்.
அத்துடன், இந்த முதலாளி ஆண்டுக்கு சுமார் 90 நாட்கள் மட்டுமே லண்டனில் வசிப்பார் என்பதால், மீதமுள்ள நாட்கள் முழுவதும் அவருடன் உலக நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதனால் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் என்று எதுவும் இல்லாமல் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். மேலும், முதலாளியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இரகசியங்களை எக்காரணம் கொண்டும் வெளியே பகிரக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையும் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், சலவை நிபுணர், ஓட்டுநர், பராமரிப்பாளர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் என அனைத்துப் பணிகளையும் ஒரே நபராகச் செய்வதற்குத்தான் இந்த ₹90 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.
