LATEST NEWS
“அய்யோ கடவுளே..! ராட்சத பாலம் நொடியில் இடிந்து சாம்பலான கொடூரம்..!” சீனாவை சுக்குநூறாக உடைத்த மெகா இயற்கைச் சீற்றம்.. பதைபதைக்கும் வைரல் வீடியோ..!!
சீனாவின் திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக, நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திமுரே மற்றும் சியாப்ரு பேசி பகுதிகளில் உள்ள வீடுகள், சந்தைகள் மற்றும் சொத்துக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஒரு பாலமும் இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த இயற்கை சீற்றத்தைத் தொடர்ந்து, திமுரே எல்லைச் சாவடியில் பணியில் இருந்த 9 காவல்துறை அதிகாரிகள் காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் அங்கு இருந்த 25 முதல் 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
चीन के तिब्बत से आई अचानक बाढ़ ने नेपाल के रसुवा जिले में भारी तबाही मचाई है। भोटेकोशी नदी का पानी अचानक बढ़ने से टिमुरे और स्याब्रुबेसी इलाके के कई घरों, बाजारों और दूसरी संपत्तियों को नुकसान पहुंचा है।
तेज बहाव में वाहन और सामान बह गए, जबकि एक पुल भी टूट गया। बाढ़ के बाद… pic.twitter.com/UszjzHfgiC— Rajesh Sahu (@askrajeshsahu) August 26, 2026
நேபாள வெள்ளத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டக் ஆற்றில் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு திடீர் வெள்ள அலை வரக்கூடும் என பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரித்துள்ளதால், மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், கோபால்கஞ்ச், சரண், முசாஃபர்பூர், வைஷாலி, சீதாமர்ஹி மற்றும் ஷிவ்ஹார் ஆகிய மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
