“எங்கு போனாலும் இங்கு தான் வரணும்”…. விஜய்க்காக கீர்த்தி சுரேஷ் செய்த செயல்…. வைரலாகும் புகைப்படம் (உள்ளே)….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்கு போனாலும் இங்கு தான் வரணும்”…. விஜய்க்காக கீர்த்தி சுரேஷ் செய்த செயல்…. வைரலாகும் புகைப்படம் (உள்ளே)….!!!!

Published

on

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. பின்னர் தென்னிந்திய மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

சுமார் ஏழு வருடத்தின் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சாணி காகிதம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

அவ்வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் வாரிசு படம் பார்ப்பதற்காக நேற்று சென்னை வந்துள்ளார். எங்கு போனாலும் பொங்கலுக்கு சென்னை வந்து தான் ஆகணும் என தியேட்டரில் எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்து உள்ளார். சமீபத்தில் தாய்லாந்து சுற்றுலா சென்று இருந்த அவர் விஜய்காக சென்னை வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in