LATEST NEWS
முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு…. உருக்கமாக பதிவு போட்ட செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா…!!!!
சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல் கதாநாயகனாக நடித்த அர்ணவைஇரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்பு தனியாக ஒரே வீட்டில் இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பின் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு ஒன்றாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. திவ்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறிய சில வாரங்களில் அர்ணவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
இந்த பிரச்சனை போலீஸ் விசாரணை வரை சென்றது. அதன் பிறகு கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு சீரியல் பிரபலங்கள் ஆறுதலாக இருந்தே வளகாப்பு நடத்தினர். இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட உருக்கமான ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதேசமயம் பிறந்த குழந்தையை இன்னும் நடிகை அர்ணவ் வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
