LATEST NEWS
“மகாலட்சுமியை பார்த்து இப்படி சொல்லிட்டாரே”…. மனைவியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரவீந்தர் போட்ட பதிவு….!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது.
அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார்.
மறுபக்கம் மகாலட்சுமி சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். அது மட்டுமல்லாமல் பல விளம்பரங்களையும் செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். திருமணம் முடிந்த கையோடு இவர்களின் திருமணம் விமர்சிக்கப்பட்டாலும் தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம் விடுமுறை நாட்களில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதி தங்களின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
சமீபத்தில் கூட ரவீந்தர் தன் உடல் எடையை குறைக்க சில முயற்சிகளை எடுக்கப் போவதாக பேட்டியில் கூறியிருந்தார். தற்போது ரவீந்தர் தனது மனைவி பற்றி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டு வரும் நிலையில் அவர்கள் ஒன்றாக ஹோட்டலில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு mr and Mrs sapatu pakkigal என அவர் பதிவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
