LATEST NEWS
“அடப்பாவமே..! பூட்டிய PHC மருத்துவமனை.. பிரசவ வலியால் கதறி துடித்த தாய்… அப்புறம் நடந்த சம்பவம் தான் கொடுமை.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!”
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள மலரானா ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவ வலியால் துடித்த ஒரு பெண் மருத்துவமனை வளாகத்தின் தரைப்பகுதியிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரசவத்திற்காக வந்த நேரத்தில் மருத்துவமனை பூட்டப்பட்டிருந்ததுடன், அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்களும் ஊழியர்களும் ஆஜராகவில்லை. இதனால் வேறு வழியின்றி அந்தத் தாய் திறந்தவெளியிலேயே பிரசவிக்கும் அவலநிலை ஏற்பட்டது. இந்த வீடியோ இணையதளத்தில் தீயாய் பரவி நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
हॉस्पिटल में जमीन पर तड़पती रहीं एक माँ…💔
वही जमीन पर बच्चे को जन्म दिया हॉस्पिटल में लगा था ताला..
ये घटना राजस्थान के सवाई माधोपुर जिले के मलराना
PHC की है..
स्टाफ और डॉक्टर दोनों ही ड्यूटी पर नहीं थे इसकी वजह से प्रेगनेंट महिला को हॉस्पिटल परिसर में
जमीन पर delivery… pic.twitter.com/GqgFPPYA1h— Namita (@Namita62307261) July 26, 2026
இந்தக் கொடுமைக்கு பிறகு, அங்கு வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் உடனடியாக தாயையும் சேயையும் மீட்டு வார்டிற்கு மாற்றினார். அதன் பின்னர், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக சமூக சுகாதார மையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியப்போக்கு மற்றும் பொறுப்பற்ற செயல் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
