CINEMA
ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகர் நரேன்….. வைரலாகும் குடும்ப புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் நரேன்.இவர் நிழல் குத்து என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் தனது திறமையான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார். அதனால் தமிழில் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இவரை ஹீரோ ஆக்கினார் மிஷ்கின். அதுதான் அவரின் முதல் திரைப்படம்.தமிழில் அந்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
அதன்படி இவர் நடிப்பில் வெளியான நெஞ்சிருக்கும் வரை,பள்ளிக்கூடம் மற்றும் அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் தமிழில் பட வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கின.
இருந்தாலும் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அசத்தி இருந்தார். இந்நிலையில் இவர் குடும்பத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram