LATEST NEWS
காலில் கட்டுடன் நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவு…. என்ன ஆச்சு தெரியுமா?….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை.
இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இந்நிலையில் சினிமா மற்றும் அரசியலில் பிசியாக இருக்கும் குஷ்பூ தன்னுடைய வீட்டில் பயங்கர வலியில் துடித்துக் கொண்டுள்ளார்.
அதாவது காலில் கட்டுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உங்களின் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும்போது ஒருவர் என்ன செய்வார், மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, இருந்தாலும் எனது பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும் வரை நான் எடுத்த மாட்டேன் என்று அவர் பதிவிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க