LATEST NEWS
கேமரா முன் வர பயந்து திரும்பிக் கொண்ட நடிகை சமந்தா…. என்ன ஆச்சு?…. வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் சிகிச்சை முடிந்து பழைய நிலைக்கு திரும்பினார். இவரின் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது.
வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமந்தா சமீபத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது அவரை போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்துள்ளனர். ஆனால் கேமரா பிளாஷ் பார்க்க முடியாமல் சமந்தா பயந்து திரும்பி கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/SamzCraziestFan/status/1643980044442959874
