CINEMA
என் அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்… நடிகை ஸ்ருதிஹசன் சொன்ன விஷயம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சினிமாவில் பாடகையாக அறிமுகமான நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். அதனை தொடர்ந்து நடிப்பில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்த இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர். ஆனால் சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் தனது காதலர் பிரிந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தி ஒரு பேட்டியில் நடிகர்கள் குடும்பத்தில் இருந்து வந்ததால் மிகவும் எளிமையாக உங்களுக்கு அனைத்தும் கிடைத்து விட்டதாக நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன் “கண்டிப்பாக இல்லை. நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்தவற்றை குறித்து பலருக்கும் தெரியாது. என் அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு என்னோட வாழ்க்கை ரொம்ப கடினமாக இருந்தது. அப்பாவை பிரிந்து அம்மாவுடன் நாங்கள் சென்ற பிறகு எங்கள் வாழ்க்கை நினைத்தது போன்று இல்லை.