LATEST NEWS
ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யா வீட்டிலும் இப்படியா?…. ரஜினி குடும்பத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடம் இறுதிக்குள் படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சமீபத்தில் ஒரு திருட்டு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா வீட்டிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதாவது திரை உலகில் கிராபிக் டிசைனர் மற்றும் இயக்குனராக இருக்கும் சௌந்தர்யா தனது காரின் சக்தியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒருவேளை இது திருட்டு ஆக இருக்குமோ என கூறப்படுகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா வீட்டில் நடைபெற்ற திருட்டு பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது சௌந்தர்யாவின் கார் சாவி காணாமல் போனதும் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
