“திவ்யா ஸ்ரீதர் அப்படி ஒரு விஷயம் செஞ்சுட்டாங்க”…. குழந்தையை நான் கேட்க மாட்டேன்…. உணர்ச்சிவசப்பட்ட அர்னாவ்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திவ்யா ஸ்ரீதர் அப்படி ஒரு விஷயம் செஞ்சுட்டாங்க”…. குழந்தையை நான் கேட்க மாட்டேன்…. உணர்ச்சிவசப்பட்ட அர்னாவ்…!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல் கதாநாயகனாக நடித்த அர்ணவைஇரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு தனியாக ஒரே வீட்டில் இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பின் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு ஒன்றாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. திவ்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறிய சில வாரங்களில் அர்ணவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

Advertisement

இந்த பிரச்சனை போலீஸ் விசாரணை வரை சென்றது. அதன் பிறகு கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு சீரியல் பிரபலங்கள் ஆறுதலாக இருந்தே வளகாப்பு நடத்தினர். இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது வரை பிறந்த குழந்தையை அர்னாவ் நேரில் சென்று பார்க்கவில்லை.

தன்னுடைய குழந்தை மேல் பாசம் இருப்பது போல பல பேட்டிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் அவர் பேசி வருகிறார். அதனால் இகோவை விட்டுவிட்டு மகளை சென்று பாருங்கள் என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், தனது குடும்பம் நாசமாக போகும் என திவ்ய ஸ்ரீதர் மண்ணை வாரி தூற்றி விட்டுப் போனார். அவரிடம் குழந்தையை காட்டும்படி நான் கேட்க மாட்டேன் என்று உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in