Uncategorized
திருக்கடையூரில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி… வெளியான புகைப்படங்கள்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்த திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் பிறந்த நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் தனித்தனியாக பிரிய உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர்.
இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரை பிரிந்த பிறகு தனது இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா தற்போது திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். அதாவது அவர் இயக்கம் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினியும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
அது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்த நிலையில் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த கையோடு ஐஸ்வர்யா திருக்கடையூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க