LATEST NEWS
FLASH: அனிதா ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் திடீர் அனுமதி.. என்னாச்சு அவருக்கு..? சற்றுமுன் பரபரப்பு.!!
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அருகே உள்ள பாளையங்கோட்டை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் திமுகவினர் திரண்டு அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போராட்டத்தில், மற்றொரு முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனும் நேரில் பங்கேற்றுத் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். இந்தத் திடீர் மறியல் போராட்டத்தால் அந்த முக்கிய நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சாலையில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். எனினும், போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையின் போது ஏற்பட்ட நெரிசலால், அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் பதற்றமடைந்த திமுகவினர் மற்றும் போலீசார், உடனடியாக அவரை மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்; அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
