பெரும் சிக்கல்…! நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு…. ஜாமீனில் கூட வெளியே வரமுடியாது…!!! - cinefeeds
Connect with us

CINEMA

பெரும் சிக்கல்…! நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு…. ஜாமீனில் கூட வெளியே வரமுடியாது…!!!

Published

on

மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கு 600க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

படங்களில் நடிக்க வந்த போது அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் வாக்குமூலம் ஆகவும் தரப்பட்டது. 4 வருடங்களுக்கு மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்து வந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிக்கை வெளியானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கூறப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உட்பட எந்த விவரங்களும் இடம்பெறவில்லை.

Advertisement

இந்த பாலியல் புகாரில் அடுத்தடுத்து நடிகர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்தவரிசையில் தற்போது மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in