LATEST NEWS
“இந்த வயதிலும் இப்படியா?மனைவியின் உயிரைக் காக்க 80 வயதில் போராடும் ஒரு நிஜக் காதல்!சமூக வலைத்தளங்களை அழவைத்த முதியவரின் நெகிழ்ச்சி வீடியோ!”
கொல்கத்தாவைச் சேர்ந்த 80 வயதான ரவீந்திரநாத் சர்க்கார் என்ற முதியவர், தனது மனைவியின் மருத்துவச் செலவுகளுக்காக தினமும் 16 மணி நேரம் வாடகை டாக்ஸி ஓட்டி வரும் சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. இவருக்கு தீவிரமான ஆஸ்துமா பாதிப்பு உள்ளதால், இன்ஹேலர் உதவியுடன்தான் அதிகாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கொல்கத்தா வீதிகளில் வாகனத்தை இயக்குகிறார். இவர்களுக்கு ஆதரவளிக்க குழந்தைகள் யாரும் இல்லை. இதய நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவும், விலை உயர்ந்த மருந்துகளுக்காகவுமே தள்ளாடும் வயதிலும் அவர் இந்த அளப்பரிய தியாகத்தை செய்து வருகிறார்.
வறுமையின் பிடியில் சிக்கியுள்ள இந்த முதிய தம்பதியினர், டம்டம் பகுதியில் உள்ள ஒழுகும் தகரக் கூரை வீடொன்றில் வாழ்ந்து வருகின்றனர். நாளாந்த வருமானத்தில் வாடகையைச் செலுத்திய பிறகு கிடைக்கும் சொற்ப தொகையைக் கொண்டே அவர்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர். இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும், ரவீந்திரநாத் தனது பயணிகளிடம் அதிக கட்டணம் கேட்பதில்லை என்ற அவரது நேர்மை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மனதை உருக்கும் கதையை விளக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரது உழைப்பையும் அன்பையும் பாராட்டி வருவதுடன், தம்பதியினருக்குத் தேவையான பொருளாதார உதவிகளை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
