CINEMA
தனுஷ் வீட்டின் முன்பு குவிந்த கூட்டம்…. போயஸ் கார்டனில் பரபரப்பு…. இதுதான் காரணமா….!!

திரை உலகில் பிரபல நடிகராக தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். தனுஷ் இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானார்.
2002ல் தொடங்கிய தனுஷ் அவர்களின் திரைப்பயணம் 2024 வரை வந்துள்ளது. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படம் வெளியாகி இருந்தது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இது தனுஷின் ஐம்பதாவது படமாகும். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே நேற்று தனுஷ் தனது 41 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள தனுஷ் வீட்டின் முன்பு திடீரென பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.
என்னவென்று பார்த்த தனுஷுக்கே மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்துள்ளது. ஏராளமான ரசிகர்கள் கூட்டம் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லவும் குவிந்திருந்துள்ளனர்.
இதனை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்த தனுஷ் வீட்டில் இருந்து வெளியில் வந்து தனது ரசிகர்களுடன் பேசி மகிழுந்துள்ளார். ஒருபுறம் படத்தின் வெற்றி மறுபுறம் பிறந்த நாளுக்கு வாழ்த்திய ரசிகர்கள் என தனுஷ் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது 41வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார்.