CINEMA
பெரும் சோகம்..! “காந்தாரா” பட நடிகர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

கன்னட நடிகரான ரிசப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த படம் காந்தாரா. ஹொம்பாளே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 2022 ஆம் வருடம் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. கர்நாடகா மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் பஞ்சுருளி என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் காந்தாரா பட நடிகர் கபில் (ஜூனியர் ஆர்டிஸ்ட்) உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பை முடித்த பிறகு ஆற்றல் குளிக்க சென்றுள்ளார் அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.