LATEST NEWS
FLASH: அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் கைதாக வாய்ப்பு.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!!
திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் விஜயை அவதூறாகப் பேசிய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவர் தொடர்புடைய மற்றொரு புதிய சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஜெயங்கொண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர், அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் தன்னிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகப் பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தவெக சட்டமன்ற உறுப்பினரின் கூற்றுப்படி, அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் நான்கு பேர் தன்னைத் தொடர்புகொண்டு, தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணையுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்காக ரூ. 50 கோடி வரை பேரம் பேசியதாகவும், இந்த ஆஃபரை ஏற்க மறுத்தால் “உன்னை அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் அழித்துவிடுவோம்” எனத் தமக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அவதூறு வழக்கில் சிக்கி நீதிமன்ற நிபந்தனைகளுடன் வெளியே இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, இந்த புதிய மிரட்டல் மற்றும் குதிரை பேரக் குற்றச்சாட்டு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் கட்சி தாவ வைக்கப் பணம் தர முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த மிரட்டல் சம்பவத்தின் பின்னணியில் அனிதா ராதாகிருஷ்ணனின் தூண்டுதல் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால், அவர் மீண்டும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
