LATEST NEWS
ரசிகர்களால் “சிக்கிய விஜய்… படப்பிடிப்பில் தர.. தர வென”.. இழுத்து செல்லப்பட்டார்.. ‘விசாரணையில் வெளிவந்த உண்மை’..?
தற்போது தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே ரசிகர்களால் வருமான வரித்துறையிடம் சிக்கி உள்ளார் விஜய். சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் பல சாதனைகளை படைத்து வருகிறது மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பிகில் படத்தின் 100வது நாள் வெள்ளி விழா கொண்டத்து. இதனால் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான AGS-என்டர் டைமென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் அவர்களின் மக்கள் நிர்வாக இயக்குனர் அர்ச்சனா கல்பாத்தி சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
மேலும் பிகில் திரைப்படம் வெற்றியா..? தோல்வியா…? எவ்வளவு வசூல் என்று விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே பெரும் சண்டை ஏற்பட்டு இணையத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியிடம் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் நச்சரித்து வந்தனர். ஓரளவுக்கு மேலே போனதால் அர்ச்சனா பிகில் படத்தின் வசூல் ரூபாய் 300கோடி என்று வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையறிந்த வருமானவரி துறையினர் AGS-குழுமத்திடம் பல்வேறு கட்ட விசாரணைகள் நடித்தினார்கள் மற்றும் அவர்களின் வீடு ,அலுவலகம் போன்ற இடத்தில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பிற்க்கே வந்து விஜயிடம் விசாரணை மேற்கொண்டனர் பின்னர் காரிலே அலுவலகம் அழைத்து சென்றனர். இது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.