LATEST NEWS
“துரோகம் பண்ண என்ன இருக்கு..?” திமுக செஞ்ச தப்பு இதுதான்..! கூட்டணி பின்னடைவுக்கான ரகசியத்தை உடைத்த தொல். திருமாவளவன்..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் திமுக கூட்டணி குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். திமுக கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் விசிக மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அவர் இந்த உரையில் விளக்கமளித்துள்ளார்.
திமுக கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்று முன்னரே அறிவித்திருந்தால் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய இடங்களையும் தொகுதிகளையும் திருப்திகரமான முறையில் ஒதுக்கியிருந்தால், இவ்வளவு பெரிய அரசியல் பின்னடைவைச் சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அணுகுமுறையை திமுக கையாண்டிருந்தால் கூட்டணிக் கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியறியிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசிக துரோகம் செய்துவிட்டதாகக் கூறுபவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், அமைச்சர் பதவிகள் மீது தங்களுக்குப் பெரிய பிடிப்பு இல்லை என்றும், தேவைப்பட்டால் நாளைக்கே கூட பதவியைத் துறந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். தங்களை அடிமைகளாகப் பார்க்காமல், சுதந்திரமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் கட்சியாகப் பார்க்க வேண்டும் என்றும், தங்களின் முதன்மை நோக்கம் பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பதுதான் என்றும் அவர் தற்துணிவுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
