LATEST NEWS
பாரி இளவழகனை வெற்றிமாறனுடன் ஒப்பிட்ட சமுத்திரகனி…! அன்பே டயானா.. விமர்சனத்தில் சமுத்திரகனி சொன்ன சீக்ரெட்..!!
ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர் பாரி இளவழகன். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை எதார்த்தமாகப் பதிவு செய்து நல்ல வரவேற்பைப் பெற்ற அவர், தனது இரண்டாவது படைப்பாக ‘அன்பே டயானா’ என்ற திரைப்படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் ஜூலை 17ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
பொதுவாகத் தமிழ் சினிமாவில் சென்னை என்றாலே வடசென்னை, ராயபுரம் போன்ற பகுதிகள் அதிகம் காட்டப்படும் நிலையில், இந்தப் படத்தில் பெரம்பூர் பகுதியின் வாழ்வியலை பாரி இளவழகன் கையில் எடுத்துள்ளார். 90-களின் சன் டிவி ஸ்டைலில் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தைத் தொடர்ந்து, தற்போது பெரம்பூரையும் இயக்குநர் புதுமையாகக் காட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி, இயக்குநர் பாரி இளவழகனைப் பாராட்டிப் பேசினார். இயக்குநர் வெற்றிமாறன் தனது ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் மதுரையை எப்படிப் பிரபலப்படுத்தினாரோ, அதேபோல பாரி இளவழகன் ‘அன்பே டயானா’ படத்தில் பெரம்பூரை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் என்றும், படத்தைப் பார்த்த பிறகு அனைவருக்கும் பெரம்பூர் செல்ல வேண்டும் என்ற ஆசை வரும் என்றும் கூறினார். மேலும், முதல் படத்திலேயே சேத்தன் போன்ற ஒரு வலுவான நடிகரை வைத்துப் படம் எடுத்த பாரியின் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் பாராட்டிய சமுத்திரகனி, அவர் இன்னும் பெரிய உயரங்களை அடைவார் என்று வாழ்த்தினார்.
