TRENDING
சகமாணவிகளை பற்றிய ஆபாச செய்தி..??13 , 14 தான் இப்படியா..!! நடுங்கும் பள்ளி நிர்வாகம்..??
இந்தியா , மும்பையில் உள்ள இண்டர்நேஷனல் போர்டு பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவயதுடைய மாணவர்களுக்கு பெற்றோர்கள் வாங்கி கொடுத்த போனில் அவர்கள் சகமாணவிகளை பற்றி பேசும் பொழுது உபயோகிக்கும் அருவருப்பான ஆபாச வார்த்தைகளை கண்டுபிடித்த பெற்றோர்கள் . இதனை மாணவர்களின் பெற்றோர்களே பள்ளிக்கு சென்று புகார் கொடுத்து உள்ளனர்.
அதில் அவர்களின் மகன் படிக்கும் வகுப்பில் இந்த ஆபாச வார்த்தைகள் பேசும் மாணவர்களுக்கு தலைவன் ஒருவனும் உள்ளான் என்பதும் அது மட்டும் இல்லாமல் தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சகமாணவி ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ய போவதாகவும் மேலும் வல்லுறவு தூண்டும் வார்த்தைகளும் கொண்டு அவர்கள் வாட்சப்பில் சாட்டிங் செய்வதை ஆதாரமாக கொண்டு புகார் அளித்தனர்.
இப்படிப்பட்ட ஒரு ஆபத்து அந்த இண்டர்நேஷனல் போர்டு பள்ளியில் இருப்பதினால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அந்த பள்ளிக்கு செல்லவே பயமாக உள்ளது என்று கூறிவருகிறார்கள். இந்த தகவலை மாணவர்களின் எதிர்காலம் கொண்டு போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.