LATEST NEWS
“5 வருடங்களாக குழந்தை இல்லை”…. நீயா நானாவில் கண்கலங்கிய பெண்…. ஆறுதல் கூறிய கோபிநாத்…. வீடியோ…!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் என்ற ஒரே தொகுப்பாளர் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான தலைப்புகள் கொண்டு பரபரப்பான விவாதத்துடன் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கோபிநாத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சாள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி அதில் பல வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த வாரம் மாறுபட்ட குடும்பத்தில் திருமணம் செய்த அக்கா தங்கைகளின் சில சோகமான அனுபவ கதைகள் குறித்த விவாதம் நடைபெற்று உள்ளது. அதில் 5வருடங்களாக குழந்தை இல்லை என்பதை தங்கை பல இடங்களில் சுட்டிக்காட்டி பேசியதாக அக்கா கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது புரோமோவாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.