LATEST NEWS
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா…. கையில் எப்போதுமே அதை வச்சிருக்காங்க…. வெளிவந்த புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவரின் நடிப்பில் சகுந்தலம் என்ற திரைப்படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் எப்போதும் தனது கையில் ஜெபமாலையை வைத்துக் கொண்டு சமந்தா சுற்றி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சகுந்தலம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கூட சமந்தா கையில் ஜெபமாலையை வைத்திருந்தார். விமான நிலையத்தில் சமீபத்தில் செல்லும்போது கையில் அதனை வைத்திருந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த ஜெபமாலையை சமந்தாவுக்கு ஈஷா யோகா மையம் சத்குரு அவர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
