LATEST NEWS
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்..! தங்கம், வெள்ளி ஜரிகையுடன் மாஸ் காட்டும் பொங்கல் பரிசு..!!
தமிழக அரசு சார்பில் வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் புதிய தரத்துடன் கூடிய இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முறை விநியோகிக்கப்படவுள்ள சேலைகள் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை பார்டர்களுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட இருப்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்த திட்டத்திற்காக, தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை பார்டர்கள் கொண்ட அழகான சேலைகளும், சலவை செய்யப்பட்ட உயர்தர வேட்டிகளும் தற்போது மிகச் சிறந்த தரத்துடன் தீவிரமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய உயர்தர தயாரிப்புகள் பொதுமக்களுக்குப் பயனளிப்பதோடு மட்டுமின்றி, உள்நாட்டு நெசவுத் தொழிலுக்கும் பெரிய ஊக்கமளிப்பதாக அமையும்.நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில் இந்தச் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்திய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
