CINEMA
துப்பாக்கி விஷயம் உண்மை தான்…. தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்க தில்லு வேணும்…. விஜய்யை பாராட்டிய பிரபலம்..!!
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிற நிலையில் படத்தின் ஆடியோ லாங்ச் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் அஜித் சாரை சந்தித்தேன். “Welcome to big league”ன்னு சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியலன்னு சொன்னேன். “உங்கள் வளர்ச்சியைக் கண்டு பலர் Insecured-ஆ இருக்காங்கன்னா, You are into big league”னு சொன்னார் இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய செய்யாறு பாலு, துப்பாக்கியை கையில வச்சிக்கோங்க சிவா. எனக்கு வேற வேலை இருக்குன்னு சொல்ற டயலாக்கை விஜய் தான் திட்டமிட்டு கொடுத்தார். தன்னுடைய இடத்தை இன்னொருத்தருக்கு விட்டு கொடுக்க ஒரு தில்லு வேணும்