CINEMA
“எங்களுக்கு இங்க யாருமில்லை…!”சாமி ஆடியபடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த எஸ்கே…!””நாங்க ரெண்டு பேரும் ஓபனா பேசுவோம்!” – எஸ்கே-வின் ரகசிய பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இசையமைப்பாளர்…!
‘தாய் கிழவி’ என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த மாஸ் திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து இப்படத்தைத் தயாரிக்கிறார். ஏற்கனவே கமல்-எஸ்கே கூட்டணியில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றதால், இக்கூட்டணியின் புதிய படமான ‘சேயோன்’ மீதும் ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் எஸ்கேவின் பிறந்தநாளையொட்டி வெளியான படத்தின் அதிரடியான க்ளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
மெகா வெற்றிப் படமான ‘அமரன்’ கொடுத்த அசுர பலத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ மற்றும் ‘மதராஸி’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகச் சற்று டல்லடித்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டின. ‘மதராஸி’ திரைப்படம் ரூ.50 கோடியும், ‘பராசக்தி’ திரைப்படம் ரூ.100 கோடியும் வசூலை அள்ளிக் குவித்ததால் எஸ்கேவின் மார்க்கெட் மதிப்பு உயர்ந்து ரசிகர்களை நிம்மதியடையச் செய்தது. முதலில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே நடிப்பதாக இருந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனதை அடுத்து, இயக்குநர் சிவக்குமாரின் கதை பிடித்துப்போனதால் இந்த ‘சேயோன்’ படத்திற்குள் சிவகார்த்திகேயன் உடனடியாக நுழைந்துள்ளார்.காவல் நிலையத்திற்குள் சிவகார்த்திகேயன் சாமி ஆடியபடி வந்து, தன்னைத் தாக்க வந்தவர்களைப் புரட்டி எடுப்பது போன்ற மிரட்டலான காட்சிகள் ‘சேயோன்’ க்ளிம்ப்ஸில் இடம் பெற்று, இது ஒரு பக்கா கிராமத்து ஆக்ஷன் படம் என்பதை உணர்த்தியுள்ளது.
இப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் கமல்ஹாசன் முன்னிலையில் முறைப்படி பூஜை போடப்பட்டுப் படத்தின் படப்பிடிப்பு (Shooting) விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ‘சேயோன்’ படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன், சிவகார்த்திகேயன் மற்றும் இப்படம் குறித்து அளித்துள்ள பேட்டி இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. “சேயோன் திரைப்படம் என்னுடைய பெர்சனல் ஸ்டேட்மெண்ட் மாதிரிதான் இருக்கும்; இதை நான் ஒரு வேலையாகப் பார்க்காமல், நான் கற்றுக் கொண்ட வித்தையை வைத்து என் பெஸ்ட் அவுட்புட்டை கொடுக்க நினைத்துள்ளேன். இந்தப் படம் ரசிகர்களுக்குப் பயங்கரமான என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயனின் அசாத்திய உழைப்பைப் பாராட்டிய சந்தோஷ் நாராயணன், “தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து சாதிப்பது சாதாரண விஷயமல்ல. அந்தத் தடைகளை எல்லாம் உடைத்து எஸ்கே இன்று இந்த பெரிய இடத்திற்கு வந்துள்ளார். சினிமா பின்புலம் எதுவுமின்றி வந்த நாங்கள் இருவரும் எதையும் ஓப்பனாகப் பேசக்கூடியவர்கள். இன்று சிவாவின் வளர்ச்சியை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளரின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு ‘சேயோன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
