LATEST NEWS
“அவருக்கு சீட் கொடுக்க கூடாது…! புது சோதனையில் சிக்கித் தவிக்கும் KAS..!!!”
செங்கோட்டையனின் பேச்சுவார்த்தையின் காரணமாக சமீபத்தில் கட்சியில் இணைந்ததாகக் கருதப்படும் ஜெயக்குமாருக்கு, பெருந்துறை தொகுதியில் போட்டியிட சீட் வழங்கக் கூடாது என்று கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்துக் கொடி தூக்கியுள்ளனர். ஒருவேளை நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்பட்டால், அவருக்கு ஆதரவாக தாங்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபடப் போவதில்லை என்று மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கறாராகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கட்சி நிர்வாகிகளின் இந்த திடீர் மற்றும் உறுதியான எதிர்ப்புக் காரணமாக, கே. ஏ. செங்கோட்டையன் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
