LATEST NEWS
நீயெல்லாம் ஒரு மனுஷியா…! சின்னக் குழந்தைன்னு கூட பாக்காம… வாயில் சூப்பர் க்ளூ ஊற்றிய கொடூர அத்தை… பதறவைக்கும் பின்னணி..!!
புனேவில் குடும்பத் தகராறின் போது குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த அத்தை, 9 மாத பச்சிளம் குழந்தையின் வாயில் ‘பெவி குயிக்’ போன்ற சூப்பர் க்ளூவை ஊற்றிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெறிச்செயலால் குழந்தையின் உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு குழந்தை மிகுந்த வேதனையுடன் தவித்தது.
இதையடுத்து, உதடுகள் ஒட்டிய நிலையில் மீட்கப்பட்ட அக்குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
