LATEST NEWS
தலைக்கு மேல் மின்னும் ஒளிவட்டம் … கணவருடன் காதலில் இன்றும் உருகும் 90’S நாயகி … காதலிக்கும் பொழுது எடுத்த புகைப்படமா இது?

தமிழ் சினிமாவில் 1990 களில் கொடிகட்டி பறந்தவர்களுள் ஒருவர் குஷ்பு ஆவர். இவரின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும் .1989ல் வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் பிரபுவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார். இதன்விளைவாக இருவரை பற்றியும் அதிகமாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.
இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக 2000 ம் ஆண்டு பிரபல திரைப்பட இயக்குனர் திரு. சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த காதல் ஜோடிகளுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 2010ஆம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து தேர்தல் பணிகள் செய்தார்.
பின்பு 2014 ல் தி மு க வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்பின் 2014 அம ஆண்டு நவம்பர் 26 ல் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சந்திப்புக்கு பின் காங்கிரசில் சேர்ந்தார். இதனையடுத்து 2020ல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இந்நிலையில் முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே இவர் சுந்தர்.சி தனக்கு காதல் propose செய்த இரண்டாம் நாளில் எடுத்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ‘காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram