பள்ளிக்கூடமா? போர்க்களமா?.. கத்தி, அருவாளுடன் மிரட்டிய பெண் ஆசிரியர்.. அலறியடித்து ஓடிய மாணவர்கள் .. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பள்ளிக்கூடமா? போர்க்களமா?.. கத்தி, அருவாளுடன் மிரட்டிய பெண் ஆசிரியர்.. அலறியடித்து ஓடிய மாணவர்கள் .. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடா பிளாக்கின் லுகியா தொடக்கப் பள்ளியில், பெண் ஆசிரியை ஒருவரின் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நடத்தையால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அந்த ஆசிரியை கத்தி, அருவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை பள்ளிக்கு எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் வகுப்பறையிலேயே அந்த ஆயுதங்களை மாணவர்களுக்குக் காட்டி மிரட்டும் தொனியில் நடந்துகொண்டதால், அங்கிருந்த சிறுவர், சிறுமிகள் கடும் பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயுள்ளனர்.

कौशांबी, उत्तर प्रदेश

कड़ा ब्लॉक के प्राथमिक विद्यालय लुकिया में एक शिक्षिका के कथित व्यवहार को लेकर विवाद खड़ा हो गया है। आरोप है कि शिक्षिका चाकू और चापड़ जैसे धारदार हथियार लेकर स्कूल पहुंची और कक्षा में उनका प्रदर्शन किया, जिससे छात्र-छात्राएं सहम गए। pic.twitter.com/W1xhMj5kYn— 📍हमदर्द अल्फाज़📍 (@HumdardAlfaaz) July 17, 2026

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் பள்ளியில் திரண்டு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். வகுப்பறையில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அந்த ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in