LATEST NEWS
அடப்பாவமே..! மனிதர்களை மிஞ்சிய தூய நட்பு.. ! இறந்த நண்பனை விட்டு நகர மறுத்த ‘மணி’… இறுதி ஊர்வலம் வரை தொடர்ந்த நாயின் பாசம்..!!
திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலை அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், ‘மணி’ என்ற தெருநாய் காட்டிய உன்னதமான நட்பு அப்பகுதி மக்கள் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது. மணியும் அதனுடன் எப்போதும் ஒன்றாகவே சுற்றித்திரியும் மற்றொரு தெருநாயும் பிரித்தறிய முடியாத சிறந்த நண்பர்களாக வாழ்ந்து வந்தன.
இந்நிலையில், மணியின் நண்பன் நாய் அருகிலுள்ள வீட்டின் சுற்றுச்சுவர் அருகே எதிர்பாராதவிதமாக உயிரிழந்து கிடந்தது. தன் உயிர்த்தோழன் இறந்துவிட்டான் என்பதை உணர்ந்த மணி, மிகுந்த சோகத்துடன் அதன் உடலையே பார்த்துக்கொண்டு, ஒரு நாள் முழுவதும் அவ்விடத்தை விட்டு அகலாமல் காவல் இருந்தது.
இறந்த நாயின் உடலை அடக்கம் செய்வதற்காக அப்பகுதி மக்கள் முயன்றபோதும், மணி தன் நண்பனை விட்டு விலக மறுத்து அருகிலேயே நின்றது. இறுதியாக மாநகராட்சி ஊழியர்கள் உடலை எடுத்துச் சென்றபோது, மயானம் வரை தொடர்ந்து சென்று நண்பனின் அடக்கம் முடியும் வரை துணையாக நின்று தன் இறுதி மரியாதையைச் செலுத்தியது. மணியின் இந்தச் செயல், விலங்குகளின் ஆழமான அன்பையும் உண்மையான நட்பின் உயர்வையும் உலகிற்கு வெளிப்படுத்தியதுடன், “நட்பின் கடைசி காவல்” என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
