TRENDING
“அனைவரும் எதிர்பார்த்த அந்த நபர்”…. பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது இவங்க தான்…. உறுதியான தகவல்….!!!
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறிவிட்டனர். தற்போது 14 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் முக்கிய போட்டியாளர்களின் பெயர் எவிக்ஷன் லிஸ்டில் இடம்பெறுகிறது. அதில் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என மக்கள் முன்னதாகவே கணித்து விடுகின்றனர். இருந்தாலும் கமல்ஹாசன் கையில் இருக்கும் கார்டில் யார் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது ஞாயிற்றுக்கிழமை அன்று தான் தெரிய வருகிறது.
இந்த வாரம் எலிமினேஷனுக்கு கதிரவன், ஜனனி, ரட்சிதா, தனலட்சுமி, குயின் சி மற்றும் மைனா ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வாரம் குயின்சி வீட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளார். இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என ரசிகர்கள் அனைவரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.