LATEST NEWS
இந்த மனசு தான் சார் கடவுள்….. பொது இடத்தில் மடிப்பிச்சை கேட்ட நடிகர் பார்த்திபன்…. எதற்காக தெரியுமா….????

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த வருடம் இயக்கிநடித்த ஒத்த செருப்பு திரைப்படம் மக்களின் மனதை வெகுவாக வென்று நல்ல ஹிட் கொடுத்தது.
சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை உலகின் முதல் சிங்கிள் சார்ட் திரைப்படமாக எடுத்து இயக்குனர் பார்த்திபன் மிகப்பெரிய சாதனையைப் படைத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படத்தின் வேலைகளில் பார்த்திபன் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் 46வது சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த புத்தக கண்காட்சிக்கு வந்த பார்த்திபன் சிறைவாசிகளுக்கு புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காகச் சென்று மடிப்புச்சை கேட்டு புத்தகம் பெற்றுள்ளார். அவரின் இந்த செயல் மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றது.