VIDEOS
கிராமத்து பாட்டிகளின் நட்பைப் பாருங்க.. இப்படி ஒரு வாழ்க்கை வரம் தான்… வாலிபங்கள் ஓடும்..வயதாகக் கூடும்.. ஆனாலும் நட்பு மாறாதது!
பள்ளிக்கூடத்தில், ஏன் நம்மோடு அக்கம், பக்கத்து வீட்டுக்களில் விளையாடிய நட்பு காலம் முழுவதும் மறக்க முடியாது.
கால ஓட்டத்தில் தனித்தையே வாழ்க்கைப் பாதை மாறிவிட்டாலும், பார்த்ததும் உரிமையோடு பேச, கோபப்பட முடியக்கூடிய உறவு இதுதான்!
ஒவ்வொரு வீட்டிலும் வயோதிகர்கள் இருப்பது வரம். அவர்கள் தான், நம்மை சிறப்பாக வழிநடத்துவார்கள். அதிலும் தாத்தா, பாட்டிகளோடு வளரும் பேரக்குழந்தைகள் மிகவும் பொறுப்புடன் வளர்கின்றன.
இது ஒருபக்கம் இருக்க தாத்தா, பாட்டிகள் அருமை இன்றைய தலைமுறைக்கு தெரிவதில்லை. அதனால்தான் குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டியின் பரிட்சயம் இல்லாமல் வளர்கின்றன. அவர்களுக்கு அதனால் அன்பென்னும் பெரும் உலகும் கிடைப்பதில்லை.
தாத்தா, பாட்டிகள் பேசுவட்தைக் கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கும். அதிலும் அவர்கள் அவர்களது நெடுங்கால நண்பர்களைப் பார்த்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
இதோ இங்கேயும் அப்படித்தான். நாஞ்சில் நாட்டு பாட்டிகள் இருவர் பேசிக்கொள்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை கிராமத்தை சேர்ந்த இருபாட்டிகள் யதார்த்தமாக சந்தித்துக் கொள்கின்றனர்.
அப்போது எங்க போற என ஒரு பாட்டி கேட்கிறார். அதற்கு வெள்ளந்தியாக அழகாக பேசுகிறார் அந்த பாட்டி. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்…
